8 November 2012

என்னவன் –என் பார்வையில்-


கவிஞர்கள் எல்லோருமே பெரும்பாலும் பெண்களை வர்ணித்து தான் கவிதை எழுதிறாங்க. ஆண்களை வர்ணித்து கவிதைகளோ, பாடலோ வருவது ரொம்ப குறைவு. பெண் கவிஞர்கள் யாரும் அதில் ஆர்வம் காட்டுவதில்லை. நாம try
பண்ணிப் பார்த்தா தப்பாயிடாது என்ற ஒரு நம்பிக்கையோடு ஒரு கிறுக்கல்.



       என்னவன் 
–என் பார்வையில்-


என்னவன்......
எனக்கே உரியவன்
என் பார்வையில்.....!

அவன் கண்கள் - பார்ப்பவரை
கிறங்கடிக்க வைக்கும்
Hirithik Roshan இன் கண்கள்!

அவன் சிரிப்பு
Shahid kapoor இன்
சாகடிக்கும் அழகிய சிரிப்பு!

அடிக்கடி தன் தலைகோதும்
அந்த விரல்கள்
அழகான Parker pen கள்!

பாசம் காட்டுகையில்
பொங்கிவரும்
நாயகராவாய்....!

கோபத்தை control  பண்ண
மௌனம் காக்கையில்
அலைகளற்ற கடலாய்.....!

ஆனால் ஐந்து நிமிடத்தில்
அதை மறந்துவிடுகையில்
கஜினி சூரியாவாய்...!

தத்துவங்கள் பேசுகையில்
ஆபிரகாம் லிங்கனின்
அடுத்த பிறப்பாய்...!

சிந்திக்கும் வேளையில்
நாடியின் நுனியில் வளர்ந்(த்)திருக்கும்
தாடியை தடவுகையில்
Steve Jobs இன்
சின்ன வாரிசாய்....!

என் இதயத்தை
கடத்திச் சென்றதில்
வீரப்பனை விஞ்சியவனாய்...!


உள்ளத்தில் காதலும்
உதட்டில் நட்பும் கொண்டு
நடிக்கும் பொழுதுகளில்
நல்லதொரு நடிகனாய்....!

என்னைக் கவர்ந்து சென்ற
என்னவன் இதயம்......
எதற்கும் ஒப்பிடமுடியாததாய்....!

அது அவனுக்கு மட்டுமே சிறப்பானதாய்...
எனக்கு மட்டுமே  உரிமையானதாய்.....!!!



-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-