எத்தனையோ கனவுகளை நனவாக்கும் எண்ணங்களோடு, தன் உறவுகளைப் பிரிந்து நகரம் எனும் நரகத்திற்கு வந்து தனித்து வாழும் உள்ளங்களின் வலிகளை வார்த்தைகளாக்கி கொண்டு வருகிறது இப் பதிப்பு. ஏதேதோ எதிர்பார்ப்புக்களுடன் வேலை தேடியோ, உயர்கல்விக்காகவோ நகரத்தை நாடி வரும் இளைஞர் யுவதிகளின் புலம்பல் இது.
'என் மகன் கொழும்பில் படித்துக் கொண்டே வேலை பார்க்கிறான்' என்று ஊரில் பெற்றோர்கள் பெருமை அடித்துக்கொண்டு திரிகின்ற போதும் time table வாழ்க்கைக்குள் சிக்கித் தவிக்கும் மகனின் நிலமை கவலைக்கிடம் தான்! கொஞ்சம் திரும்பிப்படுத்தால் பக்கத்திலுள்ள சுவரில் முட்டிக் கொள்ளும் அளவிற்கு சிறியதாய் ஒரு room. அதிகாலையில் அன்பாய் எழுப்பும் அம்மாவின் குரலுக்கு பதிலாய் அலரித் தொலைக்கும் cell phone இல் set பண்ணி வைத்த அலாரம். எழுந்திருக்காமலே cell phone இல் face book log in செய்து friends இன் birthday list check பண்ணி wish பண்ணுவதில் தொடங்குகிறது நம் time table வாழ்க்கை. அவசரமாய் குளித்துவிட்டு அவசர அவசரமாய் நாமே tea போட்டு குடிக்க வேண்டிய நிலமை. என்ன இருந்தாலும் tea போடுவது பெண்களின் வேலை என்று வறட்டுக் கௌரவத்தில் ஒரு tea க்கு கூட சாப்பாட்டுக் கடையில் தங்கியிருக்கும் ஆண் நண்பர்களும் இங்கே இருக்கத்தான் செய்கிறார்கள். ருசி இல்லாத போதும் பசிக்காய் புசிக்கும் restaurant சாப்பாடு தொண்டைக்குள் இறங்க ரொம்பவே அடம்பிடிக்கும்.
Bus பிடிப்பதற்கு கால்கடுக்க நடக்கும் போது Discovery இலும் Scooty pep இலும் ஊரில் சுற்றித் திரிந்த நினைவுகள் வந்து வலிக்கத்தான் செய்கின்றன. Bus இல் ஏறி Head set ஐ காதில் கொழுவிக் கொண்டு பாடல்களை தட்டிவிட்டால் தான் பயணம் முழுமை பெறுவது போன்ற ஓர் உணர்வு. போகின்ற இடத்தில் தாய் மொழியை தவிர்த்துவிட்டு வேற்று மொழியில் பேச நிர்பந்திக்கப்படும் போதெல்லாம் நம் பேச்சு சுதந்திரமும் பறிக்கப்படுகிறது என்ற சிந்தனை வரத்தான் செய்கிறது.
எல்லாம் முடித்துக் கொண்டு மீண்டும் room க்குள் வந்து அடங்கிவிட இரவாகிப் போகிறது. ஓவ்வோர் நாளும் ஒரு குறிப்பிட்ட நேரத்தில் வீட்டில் இருந்து வரும் தொலைபேசி அழைப்புக் கூட நம் time table குள் சிக்கித் தவிக்கிறது. எப்போதும் வரும் வீட்டாரின் அழைப்பு, எப்போதாவது வரும் நட்புக்களின் அழைப்பு என்று தொலைபேசிக்குள்ளேயே நம் சொந்தங்களை அடக்கிவிடுகிறோம். தூங்கி எழுந்துவிட்டால் மறுநாள் மீண்டும் அதே வாழ்க்கை, அதே ஓட்டம்.
Kik இல்லாமல் சுற்றிக்கொண்டிருக்கும் வாழ்க்கையில் kik ஏற்றுவதற்காய் சில exams அடிக்கடி எட்டிப் பார்க்கும். இங்கே படிக்கும் நாட்களை விட பரீட்சை நாட்கள் அதிகம், படுத்து உறங்கிய நேரங்களைவிட படித்துக் கொண்டே உறங்கிய நேரங்கள் அதிகம். Exams நெருங்கும் வரை புத்தகங்களை disturb பண்ண விரும்புவதில்லை. Exam வந்ததும் study leave எடுப்பதற்காய் university இலும் work இலும் எடுத்து விடும் பொய்கள் நம் கற்பனை திறனின் அத்திவாரம். Study leave என்ற பெயரில் வீட்டில் நின்றாலும் நிம்மதியாய் படித்துக்கொள்ள முடிவதில்லை. மூன்று வேளை சாப்பாடு எடுப்பதற்காய் வெளியில் சென்று வருவதிலேயே நேரம் சரியாகிப் போகிறது. அக்கறையுடன் சமைத்துக்கொடுக்க அருகில் அம்மா இருப்பதில்லையே! இதற்காகவே மூன்று வேளையை இரண்டாகவோ, ஒன்றாகவோ சுருக்கிக் கொண்டு notes ஐ சப்பித் தொலைக்கும் நட்புக்களும் உள்ளன.
ஊருக்குப் போவதற்காய் போயாவும் strike ம் தேடி அலைந்து குறைந்தது மூன்று நாள் விடுமுறை கிடைத்துவிட்டால் வருகின்ற சந்தோசமே தனி! இரவு bus ஐ பிடித்துவிட்டால் மறுநாள் சூரியோதயம் ஊரில் தான். அங்கும் நம் ஓட்டம் அடங்குவதில்லை. 'இங்க வந்தும் வீட்டில் ஆறுதலாய் நிற்கவில்லை' என கோபித்துக்கொள்ளும் குடும்பத்தினர், 'வந்ததற்கு ஒருமுறை தானே நம்மை சந்திக்க வந்தாய்' என குறைபட்டுக்கொள்ளும் நட்புக்கள் என அன்புத் தொல்லைக்குள் மாட்டித் தவிக்கிறது நம் விடுமுறை நாட்கள். எல்லாவற்றிற்கும் மேலாக பணப் பிரச்சனை. அது வேண்டும், இது வேண்டும் என வீட்டில் அப்பாவிடம் list கொடுத்து சட்டம் போட்டுக் கொண்டிருந்து விட்டு, இங்கே வந்து budget இல் வாழ்க்கை நடத்த வேண்டிய நிலமை. ஆனாலும் இன்றாவது நம்மில் பலருக்கு பெற்றோரின் கஷ்டம் புரிந்தது வரவேற்கத்தக்கதே.
இத்தனை கஷ்டங்களையும் எதற்காக புலம்புகிறேன் என்று சிந்திக்கிறீர்களா? இத்தனை வலிகளையும் உணர்ந்து தாம் நகரிற்கு வந்த நோக்கத்தை அடைவதற்காய் வாழும் நட்புக்கள் எத்தனை உள்ளன? பல கஷ்டங்கள் பட்டு பெற்றோர் அனுப்பி வைக்கும் பணத்தை party என்ற பெயரில் குவாட்டர் சொல்லி வீணடிக்கும் ஆண்களும், style என்ற பெயரில் beauty centers இல் இறைக்கும் பெண்களும் இவற்றை உணர மறந்துவிட்டனரோ? நம் நல் எதிர்காலத்தை எதிர்பார்த்து பெற்றோர்கள் காத்திருப்பார்கள் என்பது நினைவில் இருப்பதில்லையோ? ஏற்றுக்கொண்ட வாழ்க்கை கசப்பாய் இருந்தாலும் அதற்கான காரணம் புரிந்துவிட்டால் கஷ்டங்கள் மறைந்துவிடும். நாம் இத்தனை வலிகளையும் சுமக்கின்றோம், நம் வாழ்க்கை வழி தவறிப் போவதற்காய் அல்ல என்று அனைத்து நட்புக்களும் புரிந்து கொண்டால் நாளைய நாட்கள் நம் கையில்....!
காதலித்து இவ் வாழ்க்கையை
கட்டிக் கொள்ளவில்லை!
கட்டிக் கொண்டதால்தான் இன்னும்
காதலித்துக் கொண்டிருக்கிறோம் - நம்
கனவுகளை நனவாக்குவதற்காய்......!!
-இதயத்துடிப்பின் இடைவெளிக்குள்-